Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்துக்கள் 4 பிள்ளைகள் பெற்று இருவரை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்; பெண் துறவி பேச்சால் பரபரப்பு

ஏப்ரல் 19, 2022 10:55

லக்னோ: ''ஒவ்வொரு இந்து தம்பதியும் நான்கு பிள்ளைகள் பெற்று, இருவரை நாட்டிற்கு அர்ப்பணிக்க வேண்டும்,'' என, துறவி சாத்வி ரிதம்பரா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு நிராலா நகரில் ராம் மஹோத்சவ விழாவில் சாத்வி ரிதம்பரா பேசியதாவது: நாட்டின் முன்னேற்றத்தில் பொறாமை உள்ளவர்கள் தான் டில்லியின் ஜஹாங்கிர்புரியில் நடந்த அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹிந்து சமூகத்தை அரசியல் பயங்கரவாதம் வாயிலாக பிளவுபடுத்த முயல்வோர் காணாமல் போய் விடுவர்.

ஹிந்து பெண்கள் 'நாம் இருவர்; நமக்கு இருவர்' என்ற பிரசாரத்தை கைவிட்டு 'நாம் இருவர்; நமக்கு நால்வர்' என்ற திட்டத்திற்கு மாற வேண்டும். நான்கு பிள்ளைகளில் இருவரை குடும்பத்திற்கும், இருவரை நாட்டிற்கும் அர்ப்பணிக்க வேண்டும். இதற்காக அவர்களை ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் சேர்க்கலாம் அல்லது விஸ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்களாக்கி நாட்டிற்கு தாரை வார்க்கலாம். மக்கள் தொகையில் சமத்துவம் இல்லையெனில் அது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்